search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்மீட்டரை எரித்து மோசடி- மின்வாரிய ஊழியர் சஸ்பெண்டு
    X

    கோப்பு படம்.

    மின்மீட்டரை எரித்து மோசடி- மின்வாரிய ஊழியர் சஸ்பெண்டு

    • மோசடிகள் செய்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது
    • தனியார் தொழிற்சாலைக்கு ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் பகிர்மான வட்டம் திருப்பூர் டவுன் தெற்கு மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட தனியார் தொழிற்சாலையில் மின்சார மீட்டரை எரித்து மின்சார கட்டணத்தை குறைத்து மோசடிகள் செய்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது

    தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச., மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட கலெக்டரிடம் நேரிடையாக புகார் அளித்தார்.

    இந்தப் புகாரின் அடிப்படையில் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது .இதில் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துமின்சார வாரியம் சார்பில் சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த மோசடியில் ஈடுபட்ட போர்மேன் பாபு முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×