search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர் பகுதியில் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் கைது
    X

    கோப்புபடம்

    பெருமாநல்லூர் பகுதியில் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் கைது

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தசேர்ந்த தீபக் பரிக், மனோஜ் பிரதான், ரெட்டிகன்டா மஜூஹி , ஆகிய 3 பேரை கைது செய்தனர்

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி மற்றும் பெரமநல்லூர் பகுதிகளில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர் .இவர்களுக்கு வாலிபர்கள் சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக திருப்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அவிநாசி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் உதவி ஆய்வாளர்கள் மணிமுத்து, குணராஜ், காவலர்கள் விஜயகுமார், ஜீவானந்தம் மற்றும் சரவணகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் வட மாநில தொழிலாளர் தங்கி இருக்கும் பகுதிகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தசேர்ந்த தீபக் பரிக், மனோஜ் பிரதான், ரெட்டிகன்டா மஜூஹி , ஆகிய 3 பேரை கைது செய்தனர் .மேலும் அவர்களிடம் இருந்த 3 .5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×