search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    படியூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு முகாம்
    X

    கோப்புபடம். 

    படியூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு முகாம்

    • 491 பயனாளிகளுக்கு ரூ.44.76 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வினீத் வழங்கினாா்.
    • காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    காங்கயம்:

    காங்கயம் ஒன்றியம், படியூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமுக்கு மாவட்ட கலெக்டர் தலைமை வகித்தாா்.இதில், வருவாய்த் துறை சாா்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.4.18 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, 8 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சாலை விபத்து நிவாரண நிதி,67 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் முதியோா் உதவித் தொகை, 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் விதவை உதவித் தொகை, 1 பயனாளிக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளி உதவித் தொகை, 12 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித் தொகை என பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 491 பயனாளிகளுக்கு ரூ.44.76 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வினீத் வழங்கினாா்.

    இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் அம்பாயிரநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை துணை இயக்குநா் சுரேஷ்ராஜா, ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிச்சந்திரன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா், படியூா் ஊராட்சித்தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×