என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் குடியிருக்க வீடு கேட்டு மாற்றுத்திறனாளி கோரிக்கை
- ழந்தைகள் இருவரும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
- குடும்பத்தை வழி நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 41). இவரது மனைவி பானுமதி( 36).இவர்களது மகன்கள் சந்தோஷ்குமார், (12) மனோஜ்குமார் ( 7) .பிறவி முதலே கணேசனுக்கு பார்வை தெரியாது .இதனால் வாழ்க்கை நடத்த சிரமப்படுவதாகவும்,அரசு சார்பில் குடியிருக்க வீடு தரவேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:- நான் பிறந்தபோது மஞ்சள் காமாலை ஏற்பட்டு பார்வை பறிபோனது. பார்வை தெரியாததால் யாரும் வேலைக்கு சேர்க்க மறுக்கின்றனர். குழந்தைகள் இருவரும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.மனைவி, குழந்தைகளை கவனித்தபடி, வீட்டிலேயே பனியன் வேஸ்ட் பிரிக்கும் வேலை செய்து வருகிறேன். தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் செய்யும் உதவியால் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அரசு வழங்கும் உதவித்தொகை வாழ்வாதாரமாக உள்ளது. என்னால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால், குடும்பத்தை வழி நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது.எனவே அரசு சார்பில் குடியிருக்க வீடு ஒதுக்கி கொடுத்தால், மனைவியின் வருமானம் மற்றும் உதவித்தொகை கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொள்வோம். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்