search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சமவெளியில் கரிப்பலா மரம் வளர்ப்பு
    X

    கோப்புபடம்.

    சமவெளியில் கரிப்பலா மரம் வளர்ப்பு

    • நாற்றுகளை வாங்கி நடவு செய்ய அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டினர்.
    • சத்து நிறைந்ததால் இக்காய்கறிக்கு தற்போது மவுசு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    சமையலில் பயன்படும் முக்கிய காய்கறிகளில் ஒன்றாக, கறிப்பலா உள்ளது. சமவெளி பகுதிகளில் இது பயிரிடப்படுவதில்லை. மலைப்பாங்கான பகுதிகளில் இக்காய்கறி விளையும்.இதை சமவெளியிலும் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலை வாசஸ்தலங்களில், கறிப்பலா மரங்கள் அதிகளவு உள்ளன. அங்கிருந்து ஒவ்வொரு சீசனுக்கும்கறிப்பலா, விற்பனைக்காக சமவெளிப்பகுதிக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாகும்.இந்நிலையில் அரசு தோட்டக்கலை பண்ணைகளில், கறிப்பலா நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    வீடுகளிலும், விளைநிலங்களில், காற்று தடுப்பானாக வரப்புகளிலும், இவ்வகை நாற்றுகளை வாங்கி நடவு செய்ய அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டினர்.நீர் வளம் மிகுந்த மலையடிவார விளைநிலங்களில்வணிக ரீதியாக, கறிப்பலா மரங்களை சிலர் பராமரிக்க துவங்கியுள்ளனர். நாற்று நடவு செய்து 5 முதல் 6 ஆண்டுகளில் காய்களை அறுவடை செய்யலாம். இவ்வாறு உடுமலை பகுதியில் தற்போது அறுவடை செய்யப்படும் கறிப்பலா கிலோ 25 ரூபாய் வரை, சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.மக்களும் இக்காய்கறியை விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர். சத்து நிறைந்ததால் இக்காய்கறிக்கு தற்போது மவுசு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×