search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லதங்காள் அணை நீர்வழிப்பாதையில் மின்கம்பம் அமைப்பதை தடுக்க கோரிக்கை
    X

    மின்கம்பம் அமைப்பதாக கூறப்படும் நல்லதங்காள் அணை நீர்வழிப்பாதையை படத்தில் காணலாம். 

    நல்லதங்காள் அணை நீர்வழிப்பாதையில் மின்கம்பம் அமைப்பதை தடுக்க கோரிக்கை

    • திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.
    • .மழை நீர் அதிக அளவில் வரும் போது நீர் வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின் கம்பங்கள் மழை நீரில் அடித்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்கள் அமைத்து வருகின்றனர். தற்போது மழை காலம் துவங்க உள்ளதால் நல்ல தங்காள் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.மழை நீர் அதிக அளவில் வரும் போது நீர் வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின் கம்பங்கள் மழை நீரில் அடித்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர் பலி ஏற்படும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நீர் வழித்தடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு விவசாயிகள், சங்க நிர்வாகிகள் , பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×