search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கப்பள்ளி-கொடுவாய் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    செங்கப்பள்ளி-கொடுவாய் பகுதியில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    அவிநாசி:

    பெருமாநல்லூா், செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    செங்கப்பள்ளி, ஜோதி நகா், சரவண நகா், ப்யூா் டிராப் கம்பெனி பகுதி, கேபிஆா் மில் பகுதி, கருடா நகா்.

    பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில்நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டி பாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, மற்றும் உகாயனூா்.

    Next Story
    ×