search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
    X

    முகாம் நடைபெற்ற காட்சி.

    காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

    • நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 100க்கும்மேற்பட்ட வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது

    பல்லடம்:

    பல்லடம் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பல்லடம்,மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், ஆகிய போலீஸ் நிலையங்களில், இடப் பிரச்சனை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை, உள்ளிட்ட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் பல்லடத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 100க்கும்மேற்பட்ட வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது. இந்த முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்லடம் மணிகண்டன், குற்றப்பிரிவு சரஸ்வதி, மங்கலம் கோபாலகிருஷ்ணன், அவிநாசிபாளையம் விஜயா, மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் சமூக ஆர்வலர்கள் கொடுத்த மனுவில் , பல்லடம் நால்ரோடு சிக்னல், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிலர் கார் கண்ணாடிகளை தட்டி பிச்சை கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் சாபம் இடுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும், மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் கார் கண்ணாடிகளில் சோப்பு தண்ணீரை பீச்சி அடித்து,கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்பதாகவும், எனவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×