search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில்  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும்  கூட்டம்  நாளை நடக்கிறது
    X

    திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

    • மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம்.
    • திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் நாளை 9-ந்தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் .வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை 9-ந்தேதி( வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×