search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டடம் அருகே குளவி கொட்டி மாணவி பலி
    X

    கோப்புபடம்.

    குண்டடம் அருகே குளவி கொட்டி மாணவி பலி

    • தோட்டத்தில் தென்னை மரத்தின் கீழ் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
    • காற்று வேகமாக வீசியதால் தென்னை மட்டையுடன் கட்டியிருந்த குளவிக்கூடும் கீழே விழுந்தது.

    குண்டடம் :

    தர்மபுரியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் சினேகா (வயது 17). பள்ளி மாணவியான இவர் கோடை விடுமுறை என்பதால் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள எருக்கலாம்பாளையத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் பெரியம்மாவான பஞ்சலை வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் அங்குள்ள ஒரு தோட்டத்தில் தென்னை மரத்தின் கீழ் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அந்த மரத்தின் தென்னை மட்டையில் குளவி கூடு கட்டியிருந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தென்னை மட்டையுடன் கட்டியிருந்த குளவிக்கூடும் கீழே விழுந்தது. இதனால் அதில் இருந்து பறந்த அதிகளவிலான குளவிகள் சினேகாவை கொட்ட தொடங்கியது. இதனால் அவர் அலறி துடித்தார். சினேகாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சினேகா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×