search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி வீட்டில் திடீர் தீ விபத்து - 6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
    X

     தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சாம்பலானதை படத்தில் காணலாம்.

    விவசாயி வீட்டில் திடீர் தீ விபத்து - 6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

    • கோவில் திருவிழாவுக்காக வீட்டை பூட்டிக் கொண்டு சென்று விட்டார்.
    • உடுமலை போலீசில் புகார் செய்தார்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சடையப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55),விவசாயி.இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தோட்டத்து சாலையில் குடியிருந்து வருகிறார். லட்சுமணன் வெளியூரில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்காக வீட்டை பூட்டிக் கொண்டு சென்று விட்டார்.இந்த சூழலில் நேற்று இரவு அவரது தோட்டத்துச் சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து விட்டது. அப்போது வீட்டில் உள்ள பொருட்கள்,நகை,பணம் உள்ளிட்ட பல்வேறு வகையான அசல் ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

    இந்த நிலையில் வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு லட்சுமணன் நேற்று இரவு தனது வீட்டுக்கு வந்தார். அப்பொழுது வீடு முழுவதும் எரிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து லட்சுமணன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் லட்சுமணன் வீட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம ஆசாமிகள் யாரேனும் தீ வைத்தனர் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். இந்த தீ விபத்தில் சுமார் 6 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக லட்சுமணன் தெரிவித்தார்.

    Next Story
    ×