என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை
- பலமுறை எச்சரித்தும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
- சோதனையின் போது மது வாங்க வந்த குடிமகன்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தாராபுரம்:
தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பலமுறை எச்சரித்தும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
இது குறித்து தாராபுரம் பகுதியில் இருந்து மதுபிரியர்கள் கோவை மண்டல மேலாளருக்கு புகார் மனுக்கள் அனுப்பினார்கள்.
இந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் கோவை மண்டல மேலாளர் ெஜகதீசன் தாராபுரம் வந்தார்.பின்னர் அவர் தாராபுரம் ஐந்து முக்கு, என்.என்.பேட்டை வீதி, பஸ் நிறுத்தம், பொள்ளாச்சி ரோடு, உடுமலை ரோடு, அலங்கியம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது டாஸ்மாக் கடைகளில் இருப்பு பதிவேட்டின்படி மது பாட்டில்கள் இருப்பு உள்ளதா? பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சோதனையின் போது மது வாங்க வந்த குடிமகன்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்