search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செல்போன் பறித்த வாலிபர் கைது
    X

    கோப்புபடம்

    செல்போன் பறித்த வாலிபர் கைது

    • போலீசார் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மின்னல் ராஜா( 36) என்பது தெரிய வந்தது .
    • திடீரென கத்தியை காட்டி, அவர் வைத்திருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பியோட முயன்றார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதி நகரை சேர்ந்தவர் கணேச மூர்த்தி (வயது 52). இவர் மோட்டார் சைக்கிளில் பல்லடம்- கணபதிபாளையம் ரோட்டில் சிட்கோ தொழிற்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த ஒருவர் திடீரென கத்தியை காட்டி, அவர் வைத்திருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பியோட முயன்றார்.

    இதற்குள் கணேசமூர்த்தி திருடன் திருடன் என சத்தம் போடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மின்னல் ராஜா( 36) என்பது தெரிய வந்தது .இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×