search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தென்னை நார் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய கோவையில் பரிசோதனைக்கூடம் - நார் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம்.

    தென்னை நார் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய கோவையில் பரிசோதனைக்கூடம் - நார் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

    • தொழிலை மேம்படுத்த போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
    • பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் தென்னை நார் பைகள் பயன்படுத்தப்படும்

    உடுமலை :

    உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவு உள்ளதால் தென்னை நார் சார்பு பொருட்கள் உற்பத்தி தொழில் நடக்கிறது.இந்த தொழிலை மேம்படுத்த போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என நார் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில் தென்னை நார் பரிசோதனைக்கூடம் அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளதால் நார் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி கூறியதாவது:- தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில், கோவையில், 4 கோடி ரூபாய் மதிப்பில் தென்னை நார் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய பரிசோதனைக்கூடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைப்பது மகிழ்ச்சி யளிக்கிறது.பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் தென்னை நார் பைகள் பயன்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறுகையில், எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க, முதலீடுகளுக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.நார் தொழிலில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 12 ஆயிரம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, 1.55 கோடி ரூபாய் செலவில் தொழில் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.இதுபோன்ற அறிவிப்பால் வேலை வாய்ப்பு ஏற்படுவதுடன் ஏற்றுமதி வாய்ப்பு மேம்பட வாய்ப்புள்ளது என்றார்.

    Next Story
    ×