search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உடுமலையில் மீண்டும் மர்மவிலங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
    X

    மர்மவிலங்கு தாக்கி உயிரிழந்த ஆடுகளை படத்தில் காணலாம்.

    உடுமலையில் மீண்டும் மர்மவிலங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

    • மர்மவிலங்கு தாக்கி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
    • வனத்துறை சார்பில், கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை சுற்றுப்பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் மர்மவிலங்கு தாக்கி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இதையடுத்து வனத்துறை சார்பில், கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டது.

    இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் சின்னவீரம்பட்டி இந்திராநகரைச்சேர்ந்த விவசாயி தங்கவேலு பட்டியில் மர்மவிலங்கு புகுந்து ஆடுகளை தாக்கியுள்ளது.இதில் பலத்த காயமடைந்த 2 ஆடுகள் உயிரிழந்தன. அப்பகுதிகளில்மர்மவிலங்கும் நடமாட்டம் மீண்டும் துவங்கியுள்ளது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×