search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின்சாதன விற்பனை கடையில் திருட்டு
    X

    கோப்புபடம்.

    மின்சாதன விற்பனை கடையில் திருட்டு

    • கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது.
    • ரூ. 50,000 மதிப்பிலான மின் வயர்கள்திருடப்பட்டிருந்தது தெரியவந்தது

    பல்லடம் :

    பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இதனை பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி(வயது 60) என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை கடையை வழக்கம் போல் திறந்து உள்ளார். உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருள்கள் சிதறி கிடந்தன. இதில் அங்கிருந்த சுமார் ரூ. 50,ஆயிரம் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரத்தினசாமி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அக்கம் - பக்கம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×