search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பூரில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் நாளை மின்தடை

    • காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்டம் கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி நிறுவ உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பூம்புகார், இந்திராநகர், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துபாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர். தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×