search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பல்லடம் அருகே விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் - 25-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்

    பல்லடம் அருகே விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் - 25-ந்தேதி நடக்கிறது

    பயிற்சி முகாம் 25.1.2023 (புதன் கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய அறிவியல் பேராசிரியர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கால்நடை உற்பத்திக்கு பசுந்தீவனத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் 25.1.2023 (புதன் கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பயிற்சியில், கறவை மாடு மற்றும் ஆடுகளுக்கான பசுந்தீவனம் , அடர் தீவனம், அசோலா தீவனம், ஹைட்ரோபோனிக்ஸ் தீவனம் மற்றும் ஊறுகாய் புல் தீவனம் உற்பத்தி மற்றும் தீவனமளித்தல் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் விரிவான பயிற்சி அளிக்கப்படும்.இந்த பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. எனவே இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள திருப்பூர் மாவட்ட விவசாயிகள்,கால்நடை வளர்ப்போர் 99442 87542 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளவும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×