search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உடுமலை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் - நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்

    உடுமலை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் - நாளை நடக்கிறது

    காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், , யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை ,ஹோமங்கள் நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் சீனிவாசா ஆஞ்சயே பெருமாள் கோவில் உள்ளது .இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது.

    இன்று காலை 5:45 மணிக்கு மேல் கணபதி பூஜை, புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், , யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை ,ஹோமங்கள் நடைபெற்றது.

    மாலை 5.30 மணிக்கு அனைத்து மகி ளாபஜனாமண்டலியினரின் விசேஷ பஜனை நடக்கிறது. நாளை 3 ம் தேதி காலை 5 மணிக்கு பிரதிஷ்ட ஹோமங்கள், காலை 7.30 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மேல் பிரசாத வினியோகம் நடக்கிறது.

    Next Story
    ×