search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி
    X

    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 

    இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

    • கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மறைந்த ஜீவானந்தத்தின் 115 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மறைந்த ஜீவானந்தத்தின் 115 வது பிறந்தநாள் விழா இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்உடுமலை ெரயில் நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எம்.குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி முன்னிலை வகித்தார். உடுமலை நகர செயலாளர் தெய்வகுமார் வரவேற்று பேசினார். முன்னாள் அரசு ஊழியர் சங்க நிர்வாகி நடராஜன் கொடி ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ், வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா, உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா முடிவில் மாதர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் வைதேகி நன்றி கூறினார்.

    Next Story
    ×