search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
    X

    கோப்பு படம்.

    ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

    • 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே உள்ள காவிலிபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் யார் , எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×