search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீட்டையும், பீரோ திறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    அ.தி.மு.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

    • 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு
    • 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகரில் உள்ள கே.பி.கே.நகரை சேர்ந்த அதிமுக பிரமுகரும் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க மாவட்ட துணை தலைவருமான ஆனந்தன் ஜெயா தம்பதியினருக்கு பூர்ணிமா என்ற மகளும் வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர்.

    மேலும் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் ஆனந்தன் தனது மனைவியுடன் சென்னைக்கு மீனவர் சங்க கூட்டத்திற்கு செல்வதற்கும் தனது பிள்ளைகள் சென்னையில் படித்து வருவதால் இருவரையும் பார்க்கவும் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்தும் அதில் இருந்த சுமார் 25 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதனையடுத்து நேற்று மதியம் தனது வீட்டிற்கு ஆனந்தன் குடும்பத்தினர் வந்தடார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்தது இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

    மேலும் கொள்ளை சம்பவம் குறித்து ஆனந்தன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்னர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை சேகரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கோகுல், எஸ்.ஐ. சுந்தரேசன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    ஆரணி டவுன் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×