என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செய்யாறில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
செய்யாறு:
செய்யாறு டவுன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒன்றியத்தில் நெடும்பிறை, வாழ்குடை, கொற்க்கை, முனுகப்பட்டு, பல்லி உள்ளிட்ட 7அரசு மேல்நிலைபள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு செய்யாறு ஒன்றிய குழு தலைவர் நாவல் பாக்கம் பாபு தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் மோகனவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் வழக்கறிஞர் கே விஸ்வநாதன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட சிறுபான்மை செயலாளர் வழக்கறிஞர் பாஷா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சின்னதுரை, மற்றும் திமுக பிரமுகர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்