search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரம்மதேசம் போலீஸ் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி திடீர் தர்ணா
    X

    பிரம்மதேசம் போலீஸ் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி திடீர் தர்ணா

    • உரிய அனுமதி பெற்று கொடிக்கம்பம் நடுமாறு அறிவுரை
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள அழிவிடை தாங்கி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றியுள்ளனர்.

    இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொகுதி துணை செயலாளர் சுகுமார் தலைமையில் காவல் நிலையம் எதிரே திடீரென தர்ணா செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் பாபா ஆகியோர் நாம் தமிழர் கட்சியினரிடம் உரிய அனுமதி பெற்று கொடிக்கம்பம் நடுமாறு அறிவுறுத்தினர்.

    அதன் பேரில் நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×