search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து முதியவர் சாவு
    X

    விஷம் குடித்து முதியவர் சாவு

    • மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 87), விவசாயி. இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

    பச்சையப்பன் மூட்டு வலியால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அவரது மகன் ஏகாம்பரம் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×