search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி வயர்மேன் பலி
    X

    மின்சாரம் தாக்கி வயர்மேன் பலி

    • டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் ரவி (வயது 32).

    இவர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அபய மண்டபம் அருகில் உள்ள ஒரு வீட்டில் மின் இணைப்பு பழுது ஏற்பட்டு உள்ளதாக அலுவலகத்திற்கு போன் வந்தது.

    பின்னர் அந்த வீட்டின் மின் இணைப்பை சரி செய்ய ரவி அந்த பகுதிக்கு சென்று அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி யுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×