search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மோதி பெண் பூ வியாபாரி சாவு
    X

    பைக் மோதி பெண் பூ வியாபாரி சாவு

    • குழந்தை சாலையை கடக்க உதவியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி.

    இவரது மனைவி சின்னகுழந்தை (வயது 63). கணவன் - மனைவி இருவரும் ஆரணி அக்ரா பாளையம் சிறுமூர் சாலையோரம் பூ வியாபாரம் செய்து வந்தனர்.

    கடந்த 26-ந் தேதி பூ கடைக்கு சென்ற சின்னகுழந்தை சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காயமடைந்த அவரை ஆரணி அரசு மருத்து வமனை யில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் பழனி ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×