search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் சூறாவளி காற்றுடன் கொட்டிய மழை
    X

    கோவையில் சூறாவளி காற்றுடன் கொட்டிய மழை

    • இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததில், பனை, தென்னை மரங்கள், வாழைகள் வேருடன் சாய்ந்தன
    • கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கோடை மழை பெய்தது.

    எனவே அனல் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த நிலையில் நேற்று காலை நல்ல வெயில் இருந்தது. அதன்பிறகு மாலை நேரத்தில் கருமேகங்கள் திரண்டு வந்தன. அடுத்த சில நிமிடங்களில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் கோவை மாநகரில் உள்ள பெரிய கடை வீதி, காந்தி பார்க், லாலி ரோடு, ரெயில் நிலையம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், செல்வபுரம், சரவணம்பட்டி, ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் மழையில் நனைந்தபடி மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது.

    கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியது. எனவே அங்கு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் தடாகம், கீரணநத்தம், வேடப்பட்டி, குரும்பபாளையம் ஆகிய பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிலும் குறிப்பாக பேரூர் பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்தது.

    றித்து தகவலறிந்த தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் சராசரியாக 53 மி.மீ. மழை பெய்து உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

    சின்கோனா-1, கல்லாறு-3, வால்பாறை-2, வால்பாறை தாலுகா-2, சூலூர்-12, கோவை தெற்கு-19, பீளமேடு விமான நிலையம்-6.40, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-7.69.

    Next Story
    ×