என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வடவள்ளியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து போலீஸ்காரர் நியமனம்
- காலை மற்றும் மாலை நேரங்கள், விஷேச நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- புதிதாக போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வாசுதேவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடவள்ளி,
கோவை-மருதமலை சாலை கோவை நகரின் முக்கிய சாலையாக உள்ளது.
இந்த சாலையில் வேளாண் பல்லைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இந்த சாலையில் தான் இயங்கி வருகிறது.
மேலும் முருகப்பெருமானின் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.
இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இந்த சாலையில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். அரசு பஸ்கள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் என வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இதனால் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படும்.
அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்கள், விஷேச நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் போக்குவரத்தை சீர் செய்வதற்கு, போக்குவரத்து போலீசார் என ஒரு போலீசார் கூட வடவள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியில் இல்லாமல் இருந்து வந்தனர்.
இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணிக்கு அமர்த்தி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று, சில நாட்களுக்கு முன்பு, வடவள்ளி போலீஸ் நிலையத்தில், புதிதாக போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வாசுதேவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் வடவள்ளி-தொண்டாமுத்தூர் சந்திப்பில், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் சிக்னல் இல்லாதால் அவரே போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், மக்களும் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்