search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் ஒருதலைக்காதலால் விபரீதம்-இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பி விட்டு டிரைவர் தற்கொலை
    X

    பொள்ளாச்சியில் ஒருதலைக்காதலால் விபரீதம்-இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பி விட்டு டிரைவர் தற்கொலை

    • விக்னேஷ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
    • விக்னேஷ் கடந்த 5 வருடங்களாக உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    கோவை,

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அருகே உள்ள சமத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது22). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் அந்த பகுதியில் தனது தாய் ரங்கநாயகியுடன் வசித்து வந்தார். விக்னேஷ் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது ரங்கநாயகி மகனுக்கு உணவு கொடுத்து விட்டு, தூங்குவதற்காக அருகே வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்று விட்டார். விக்னேஷ் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது விக்னேஷ், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான 17 வயது சிறுவன், கோகுல கிருஷ்ணன்(22) ஆகியோரை ஐ.பி.எல். கிரிக்கெட் பார்ப்பதற்காக வீட்டிற்கு அழைத்தார்.

    அதன்படி அவர்களும் வீட்டிற்கு வந்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கோகு லகிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதையடுத்து விக்னேசும், 17 வயது சிறுவனும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தி விட்டு தூங்கி விட்டனர்.

    மறுநாள் அதிகாலையில் விக்னேஷின் தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது. இதை யடுத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் உள்ள அறையில் விக்னேஷ் தூக்கில் தொங்கி கொண்டி ருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் கதறி அழுதார். மேலும், அங்கு தூங்கி கொண்டிருந்த 17 வயது சிறுவனை எழுப்பி, மகனை மீட்டு 108 ஆம்பு லன்சுக்கு தகவல் தெரிவித்த னர்.அவர்கள் விரைந்து வந்து, பார்த்த போது, விக்னேஷ் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், சப்-இன்ஸ்ெபக்டர் ரவி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்ப திவு செய்து, வாலிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரிக்க தொடங்கினர். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வீட்டில் ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பதை அறிய வீடு முழுவதும் சோதனை மேற்கொண்ட னர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

    தொடர்ந்து அவருடன் இருந்த 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி விட்டு, அவரது செல்போனை வாங்கி பார்த்தனர்.

    அப்போது விக்னேஷ், சிறுவனின் செல்போனில் தனது இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை திறந்து, அதில் குறுஞ்செய்தி அனுப்பியதை கண்டு பிடித்தனர்.

    அதில், என்னுடைய சாவுக்கு நீதான் காரணம். என்னுடைய அம்மாவை தனி வீட்டுக்கு போக வெச்சுட்டில்ல. சத்தியமா சொல்றேன் என் சாபம், என்னுடைய அம்மா சாபம் உன்னை சும்மா விடாது என கூறப்பட்டிருந்தது.இதையடுத்து போலீசார் அந்த தகவலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விக்னேஷ் கடந்த 5 வருடங்களாக உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்க வில்லை. கடந்த 3 மாதங்க ளாக விக்னேஷ், தனது காதலை ஏற்குமாறு அந்த பெண்ணிடம் கூறி வந் துள்ளார். ஆனாலும் அவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் விக்னேஷ் மன உளைச்சலில் இருந்ததும், அந்த விரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரது தாயார் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×