search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பள்ளி மேலாண்மை குழுவிற்கு பயிற்சி
    X

    பயிற்சி முகாம் நடைபெற்றது.

    பள்ளி மேலாண்மை குழுவிற்கு பயிற்சி

    • பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான தொகுப்பு கருத்தாய்வு பயிற்சி முகாம்.
    • பண பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் விளக்கம்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான தொகுப்பு கருத்தாய்வு பயிற்சி முகாம் நடை பெற்றது. பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார்.

    பேராவூரணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    பயிற்சியில் பின்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவி.தாமரைச்செல்வன் உள்ளிட்ட 8 குறுவளமைய தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் 297 பேர் கலந்து கொண்டனர்.

    கனரா வங்கியில் ஒற்றை சாளர முறையில் பண பரிவர்த்தனை செய்வது குறித்து வட்டார கணக்காளர்கள் செல்வக்குமார் மற்றும் முரளி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    மேலும் பண பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் விளக்கம் அளித்தனர்.

    Next Story
    ×