என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மது குடித்த 2 பேர் சாவு
திருச்சி,
திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 56). இவர் சில நாட்களாக தனது குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிக அளவு மது குடித்துவிட்டு திருச்சி பாலக்கரை பகுதி மணல்வாரித்துறை ரோடு டாஸ்மார்க் கடை அருகே மதுபோதையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மகன் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல திருச்சி உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்தவர் அப்துல் கிட்டு. இவரது மகன் ஜாகிர் உசேன்(39). இவர் திருச்சி மெயின் காட் பகுதியில் உள்ள டெக்ஸ்டைலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வீட்டை விட்டு வெளியே சென்று மது அதிகமாக குடித்து கோணகரை டாஸ்மார்க் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி நிஷா அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்