search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மது குடித்து மயங்கி விழுந்த 2 பேர் சாவு
    X

    திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மது குடித்து மயங்கி விழுந்த 2 பேர் சாவு

    • திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மது குடித்து மயங்கி விழுந்த 2 பேர் பலியானார்
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பத்தாளப் பேட்டை கீழ மங்காவனம் ஹரிஜன தெரு பகுதியை சேர்ந்தவர் தங்க–மாணிக் கம் (வயது 52). கூலித்தொழி–லாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.தொடர்ந்து நடக்க கூட முடியாத நிலைக்கு சென்ற அவர் கீழமங்கலம் டாஸ்மாக் கடை அருகாமையில் கால் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஒரு சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.இந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நலம் பாதிக் கப்பட்டது. உடனே அவ–ரது மனைவி பிரபா கணவரை மீட்டு திருச்சி அரசு மருத்து–வமனைக்கு கொண்டு சென்றார். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் தங்கமாணிக்கம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரி–தாப–மாக இறந்தார். இது குறித்து துவாக்குடி போலீ––சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கின்ற–னர்.

    இதேபோன்று கல்லக்குடி திருவள்ளுவர் நகர் பகுதி–யில் மது அருந்தி கீழே சாய்ந்த ஒருவர் இறந்தார். அரியலூர் மாவட்டம் வாரணவாசி சமத்துவ–புரம் பகுதியைச் சேர்ந்த–வர் சதீஷ்குமார் (34).டிரை–வரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குடிக்கு வந்துள்ளார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கீழே விழுந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது மனைவி பாரதி கணவரை மீட்டு அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவம–னையில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்து–வமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மீண்டும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கடைசியாக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து–வமனையில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த–போதிலும் சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இருவேறு சம்பவங்களில் மது பிரியர்கள் இறந்த சம்பவம் குடிமகன்கள் இடையே அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

    Next Story
    ×