search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
    X

    திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

    • கிருஷ்ணமூர்த்தி (43). எடைமலைப்பட்டி புதூர் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்தார்.
    • கிருஷ்ணமூர்த்தி (43). எடைமலைப்பட்டி புதூர் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்தார்.

    திருச்சி,

    திருச்சி ராம்ஜி நகரை அடுத்த பெரிய கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (43). இவர் எடைமலைப்பட்டி புதூர் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்தார். தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை கைது செய்து, கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதே போன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை கலிங்கப்பட்டியை சேர்ந்த மன்சூர் அலிகான் (23) கஞ்சா விற்பனை செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் (21). இவர் தில்லைநகர் அம்மையப்பன் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹரிச்சந்திரனை கைது செய்து அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    Next Story
    ×