search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    3 பவுன் நகை அபேஸ்
    X

    3 பவுன் நகை அபேஸ்

    • ஓடும் பஸ்சில் பெண்ணிடம் துணிகரம்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி,

    மணப்பாறை பி பெரியபட்டி வளர்ந்த நகர் பகுதியில் வசிப்பவர் முத்துசாமி இவரது மனைவி முத்துலட்சுமி (வயது55).இவர் ஒரு அரசு டவுன் பேருந்தில் மணப்பாறை அரசு மருத்துவமனை பகுதிக்கு சென்றார். பின்னர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது கழுத்தில் கை வைத்து பார்த்த போது அவர் அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலி காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து முத்துலட்சுமி மணப்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×