search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 9-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம்
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 9-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம்

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 9-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெறவுள்ளது
    • இன்று பந்தக்கால் நடப்பட்டது

    மண்ணச்சநல்லூர்:

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவி–லில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம்பெருகும், குடும்பத்தில் அமைதி நில–வும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக் கையாகும்.இதன் காரணமாக இக் கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளி–லிருந்தும் அம்மனை தரிசனம் செய்வ–தற்காக தினமும் கார், வேன், பஸ் போன்ற வாக–னங்கள் மூலமாகவும், பாத–யாத்திரையாகவும் ஆயி–ரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    உலக பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம் மன் கோவில் தமிழர் களை மட்டுமின்றி வெளிநாட்டி–னரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விம–ரிசையாக நடைபெறு–வது வழக்கம்.அனைவரும் போற்றும் சமயபுரம் மாரியம் மன் கோவிலின் சித்திரை திரு–விழாவை இந்த ஆண்டு வெகு சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பணிகள் துவங்குவதற்கான பந்தக் கால் நடும் விழா இன்று நடைபெற்றது.சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற இந்த விழாவை தொடர்ந்து சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட் டுள்ளது. நாளை மறுநாள் (9-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றம் நடைபெறு–கிறது.


    Next Story
    ×