search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் திருட்டு
    X

    வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் திருட்டு

    • வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் திருட்டு போனது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் சமீப காலமாக வீடுகள், கோயில்கள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பி கே அகரம் வடக்கு தெருவை சேர்ந்த ஆத்தி நாட்டார் மனைவி காமாட்சி( 65) இவர் வீடு பைபாஸில் இருந்து பிகே அகரம் செல்லும் வழியில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காட்டில் உள்ள தனி வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரது கணவர் (காது கேட்காதவர்) மற்றும் அவரது தந்தை வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இன்று அதிகாலை 03.00 மணி அளவில் கதவு திறந்து கிடந்த வீட்டில் உள்ளே அடையாளம் தெரியாத ஒரு நபர் சென்று காமாட்சி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளார் .இது குறித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர் . இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×