search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை சாவு
    X

    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை சாவு

    • திருச்சி உறையூரில் பரிதாபம்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    திருச்சி

    திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் சன்வந்த் (ஒன்றரை வயது). இந்த குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. 3 அடி ஆழம் கொண்ட அந்த தண்ணீர் தொட்டியில் நிரம்ப தண்ணீர் இருந்துள்ளது. இதில் மூழ்கிய சன்வந்தை பெற்றோர் உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து அவரது தாய் திவ்யபாரதி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு விசாரணை நடத்தி வருகிறார்.




    Next Story
    ×