search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சளி மருந்துக்கு பதிலாக கரப்பான் பூச்சி மருந்தை தவறுதலாக குடித்தவர் சாவு
    X

    சளி மருந்துக்கு பதிலாக கரப்பான் பூச்சி மருந்தை தவறுதலாக குடித்தவர் சாவு

    • சளி மருந்துக்கு பதிலாக கரப்பான் பூச்சி மருந்தை தவறுதலாக குடித்தவர் பலியானார்
    • நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு சளி, இருமல் அதிகமாக இருந்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநா–தன் தெரு பகுதியைச் சேர்ந்த–வர் ராதாகிருஷ்ணன் (வயது58). இவர் நீண்ட கால–மாக சளி பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு சளி, இருமல் அதிகமாக இருந்தது. அப்போது தவறுதலாக சளி மருந்துக்கு அருகாமையில் இருந்த கரப்பான் பூச்சியை கொல்லும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.பின்னர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்த அவரை மனைவி ஆண்டாள் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×