search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் விபத்தில் பலி
    X

    திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் விபத்தில் பலி

    • திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் விபத்தில் பலியானார்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 68). ஓய்வு பெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரான இவர் அண்ணா நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை–யில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனி–யார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகன் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×