search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குடிநீர் என நினைத்து தின்னரை குடித்த தொழிலாளி சாவு
    X

    குடிநீர் என நினைத்து தின்னரை குடித்த தொழிலாளி சாவு

    • தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் குடிநீர் என நினைத்து தின்னரை குடித்துள்ளார்
    • தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

    திருச்சி.

    திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி வயது 58 பந்தல் தொழிலாளி.இவர் பால்பண்ணை பகுதியில் பந்தல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதைத்தொடர்ந்து பாட்டிலில் இருந்த குடிநீர் என நினைத்து தின்னரை குடித்துவிட்டார். சற்று நேரத்தில் அடி வயிறு கலங்கியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×