என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முசிறி. மணப்பாறையில் 25-ந் தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்
- சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மின் கட்டண, உயர்வு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில் நடைபெற உள்ளது.
திருச்சி:
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மின் கட்டண, உயர்வு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறையில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மாநகர, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில் நடைபெற உள்ளது.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்