search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    திருச்சியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஏராளமான அ.தி.மு.க.வினர் பங்கேற்பு

    திருச்சி,

    கள்ளச்சாராயத்தை தடுக்க வலியுறுத்தியும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டி–ருப்பதை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.லால்குடியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் தலைமை தாங்கினார்.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை–யில் ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசாலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×