என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மதுவுக்கு அடிமையான தொழிலாளி 'திடீர்' தற்கொலை
- திருச்சியில் தொடர்கதையாகும் குடிபோதை சாவுகள்
- குடிபோதைக்கு அடிமையாகும் இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருச்சி,
திருச்சி அருகே உள்ள சோழங்கநல்லூர் புது பாலம் தெரு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு ஆளானார். தினமும் மது அருந்தாமல் அவரால் இருக்க முடியவில்லைஇந்த நிலையில் வழக்கம் போல் குடிபோதையில் வீடு திரும்பிய அன்பழகன் அருகாமையில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பாக அவரது தாயார் ஜெ கதாம்பாள் சோமரசம்பேட்டை போலீ–சில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமீபகாலமாக திருச்சி மாவட்டத்தில் தினமும் குடிப்பழக்கத்திற்கு ஆளான ஒருவர் தற்கொலை செய் வதோ, உடல் நலம் பாதிக்கப் பட்டு மரணம் அடைவதோ தொடர்கதை–யாக நடக்கிறது. குறிப்பாக குடி போதைக்கு அடிமையா–னவர்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே மரணத்தை தழுவுகின்றனர். இதனால் அந்த குடும்பங்கள் நடுத்தெ–ருவுக்கு வந்து விடுகின்றன.அல்லது குடி போதையால் அனைத்தையும் தொலைத்து விட்டமே என்ற மன அழுத் தத்துக்கு ஆளாகி வாழ பிடிக்காமல் தற்கொலை செய்யும் சம்பவங்களும் சமீப காலமாக நடந்து வரு–கின்றன.எனவே இருக்கும் குடி போதை அடிமைகளை மீட் கவும், இளைஞர்களை அந்த அதல பாதாளத்திற்கு தள்ளி–விடாமல் தடுக்க–வும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்