search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் தூர்வார ரூ.15.88 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    திருச்சியில் தூர்வார ரூ.15.88 கோடி நிதி ஒதுக்கீடு

    • 100 இடங்களில், 376 கி.மீ. நீளத்திற்கு துார் வாரும் பணி
    • அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

    திருச்சி,

    மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல ஏதுவாகவும் டெல்டா பாசனப்பகுதிகள், நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையின் சார்பில் 375.78 கிலோ, மீட்டர் நீளத்திற்கு 100 தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள 15.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் திருச்சி கோரையாற்றில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 21.50 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி பஞ்சப்பூர் அருகில் உள்ள கே சாத்தனூர் கிராமம் கோரையாற்றில் தூர் வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார். மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், சேர்மன் துரைராஜ், ஒன்றியச்செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, கதிர்வேல், கோட்டத் தலைவர் துர்காதேவி, கவுன்சிலர்கள் முத்து செல்வம்,காஜாமலை விஜய், கிராப் பட்டி செல்வம், ஜி.ஆர்.சாமி, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சொர்ணகுமார், செயற் பொறியாளர்கள் நித்தியானந்தன், ' தமிழ்ச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், நகர பொறியாளர் சிவபாதம், அரசு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×