search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போலீசார் மீது தாக்குதல் நடத்தியரவுடிகள் மீது கொலை முயற்சி வழக்கு
    X

    போலீசார் மீது தாக்குதல் நடத்தியரவுடிகள் மீது கொலை முயற்சி வழக்கு

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரவுடிகளை கைது செய்ய காத்திருக்கும் போலீசார்
    • புதுக்கோட்டை கொலை வழக்கிலும் கைது செய்ய போலீசார் தயார்

    திருச்சி,

    திருச்சியில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து ரவுடி துரைசாமியின் உறவுக்கார பெண்ணான அனுராதா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் துரைசாமி, கொள்ளையடித்து மறைத்து வைத்திருந்த 22 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்றைய போலீஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 ரவுடிகள் மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய்த்தில் கொள்ளையடிகப்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது போலீசாரை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொன்மலை ரவுடி இளவரசன் கொலை வழக்கிலும் துரைசாமியை கைது செய்ய புதுக்கோட்டை போலீசார் ஆயத்தமாகி வருகிறார்கள். சிகிச்சையில் இருக்கும் அவர் குணமடையும் பட்சத்தில் கைது நடவடிக்கை இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனுராதா மூலமாக கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×