search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவெறும்பூர் அருகே வழியடி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம்
    X

    திருவெறும்பூர் அருகே வழியடி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம்

    • திருவெறும்பூர் அருகே வழியடி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் நடைபெற்றது
    • இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் முகூர்த்த கால் நடப்பட்டு வருகிற மார்ச் 3-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திரு–வெறும்பூரை அடுத்துள்ள துவாக்குடி மலையில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவழியடி கருப்பண்ண–சாமி, ஸ்ரீ–செல்வ– கணபதி ஆகிய தெய்வங்க–ளுக்கு பாலாய விழாவானது நேற்று அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை புண்ணியாக வாஜனம் எஜமான சங்கல்பம் பஞ்ச–கவ்ய பூஜை கலச பூஜையாக வேள்விகள், பூர்ணா மஹா தீபாரதனையுடன் நடை–பெற்றன. இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் முகூர்த்த கால் நடப்பட்டு வருகிற மார்ச் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கும்பாபிஷேக விழா நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சி–யில் துணை ஆணை–யர் ஞானசேகரன், செயல் அலுவலர் வித்யா, ஆய்வாளர் பானுமதி, துவாக்குடி நகர்மன்ற தலை–வர் காயம்பு மற்றும் பக்தர் கள், பொதுமக்கள் கலந்து–கொண்டனர். விழாவையொட்டி நடை–பெற்ற பூஜைகளை திரு–நெடுங்களநாதர் கோவில் அர்ச்சகர்கள் சோமசுந்தரம், ரமேஷ் சிவாச்சாரியார் மற்றும் கோவில் பூசாரி ரமேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×