search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லால்குடி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கிய வியாபாரி கைது
    X

    லால்குடி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கிய வியாபாரி கைது

    • லால்குடி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கிய வியாபாரி கைது செய்யபட்டார்
    • போலீசார் 27.5 கிலோ எடை கொண்ட அந்த குட்கா பொருட்களை கைப்பற்றினர்

    திருச்சி,

    திருச்சி மாவட்ம் லால்குடி அருகே உள்ள அரியூர் காளியம்மன் கோவில் அருகாமையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக லால்குடி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஹான்ஸ், பான் மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் 27.5 கிலோ எடை கொண்ட அந்த குட்கா பொருட்களை கைப்பற்றினர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட புகையிலைப் பொருட்களை நாள் குடி காமாட்சி நகர் அய்யன் வகைகள் பகுதியில் சேர்ந்த பக்ருதீன் 49 என்றவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×