என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மருத்துவ அணி சார்பில் ரத்ததான முகாம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது
- அமைச்சர் மகேஷ் சான்றிதழ்களை வழங்கினார்
துவாக்குடி,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் கிழக்கு மாநகரம் காட்டூர் பகுதி 43-வார்டு பிலோமினாள்புரம் பள்ளிக் கூடத்தில் இன்று மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்து ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். தி.மு.க. மாநகர செயலாளரும் மூன்றாவது மண்டலத் தலைவருமான மு.மதிவாணன் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஓ.நீலமேகம் தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலரும் மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ந.செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியினை மாவட்ட மருத்துவர் அணித் தலைவர் டாக்டர் தமிழரசன் மாவட்ட அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு டாக்டர் முகம்மது மன்சூர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் பதினெட்டாவது முறையாக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் ரத்தத்தை தானம் செய்தார். அவரை அமைச்சர் பாராட்டி சான்றிதழ் வழங்கி மகிழ்ந்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்