என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரசவத்தில் தாயும்-சேயும் பலி
- பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் - சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்
- மண்ணச்சநல்லூர் அருகே சோகம்
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. டிரைவரான இவரது மனைவி சூரியகாந்தி (வயது 38). இவர்களுக்கு ராகுல் (15), சாதனா (9) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சூரியகாந்திக்கு கர்ப்பப்பை வீக்காக இருந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான, சூரியகாந்தி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
10 மாதம் நிறைவடைந்தும் பிரசவ வலி வராததால் சூரியகாந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்று உள்ளது. ஆனால் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. சூரியகாந்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ரத்தப்போக்கு அதிகமானதாகவும், இதன் காரணமாக ஆபரேஷன் மூலம் அவரின் கர்ப்பப்பை அகற்றப்பட்டதாகவும், இந்த அறுவை சிகிச்சையின் போது, அவருக்கு திடீர் என்று அதிகளவு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. பிரசவ சிகிச்சையின் போது தாயும் சேயும் இறந்த சம்பவம் அந்த பெண்ணின் கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்